நிரந்தரமற்ற கனவுகளை நினைவில் சுமந்து வாழ்ந்தேன்
இன்று என் விழிகளில் நீ சுமக்க
வைத்தது கண்ணீரைத் தானே...
பசுமையான என் வாழ்வில் வந்து
பாசத்தைக் காட்டி வேசம் போட்டாய்..
என் பாசங்களை வெறுத்தேன்
பொங்கி வந்த ஆசைகளைப்
பொசுக்கிப் போட்டாய்..
சில நாட்களில் பழகி
தொடர் நாட்களில் விலகி விட்டாய்..
உன் வரவுக்காய்
ஏங்கிய என் விழிகள்-இன்று
உன் கனவுக்காய் ஏங்குகின்றன...
பசியை மறந்தேன்..
படுக்கையை இழந்தேன்
கண் உறங்காமல்
கனவு கண்டேன்
என் கண்ணையே
உன்னிடம் பறி கொடுத்தேன்..
ஆதரவையெல்லாம் இழந்து நின்றேன்
நெருப்பாய் கொதிக்கிறது
எந்தன் நெஞ்சம்..
கண்கள் கண்ட காட்சியும்
பொய்யானது.
தேடிய வாழ்வின் விழியில்
நீர் மெய்யானது...
Friday, 16 July 2010
Subscribe to:
Posts (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...