நீ பொய் சொல்கின்றாய் என்று
தெள்ளத் தெளிவாக தெரிந்த போதும்...
சண்டைகள் பிடித்து சச்சரவுகள் செய்து
உனை சங்கடத்தில் ஆழ்த்தாமல்...
தலை சாய்த்து தலை அசைத்து
எதுவுமே தெரியாதது போல்
உன் முன்னே நானிருப்பேன்.
பூப்போன்ற மனதை பொய்யால் கசக்கி
புடுங்கி எறிக்கின்றாய் என்பதை நீ புரியாமல்...
ஏமாளியை இலகுவாய் ஏமாற்றி விட்டேன்
என்ற இறுமாப்புடன் எழுந்து நீ செல்வாய்.
இதயம் கனக்க, இமைகள் நனைய
இதயச் சுமையை தனிமையில் இறக்கி...
மௌனங்களோடு மட்டும் மனம் திறந்து
மனக் காயம் தீர்த்து விட்டு...
உண்மையான நேசத்தோடு மீண்டும் உனைத் தேடி
நானே வருவேன் இது ஏன் தெரியுமா...?
இன்று இல்லாவிடிலும் என்றாவது ஓர் நாள்
உன் மனச்சாட்சி உன்னை தட்டிக் கேட்கும்
என்ற நம்பிக்கையில்!
உனக்காக வாழ்ந்து உனக்கே எனை அர்ப்பணித்து
உன்னையே.. நம்பி இருந்து உனக்காக போராடி
இதயத்திலும் உடலிலும் காயங்களை சுமந்து
உனக்கெனவே.. சுவாசித்துக் கொண்டு
இருந்த என்னை தவிக்க விட்டு
நீ.. துயில் கொள்கின்றாயே..
உலகில் நீ.. சுவாசிப்பது.. ரசிப்பது
வாழ்வது.... காத்திருப்பது... பேசுவது
எல்லாம் எனக்கென இருந்தேன்
இப்பத்தான் புரிந்தது .....
நீ.. எனக்கென இல்லை என்று
இவன் பைத்தியக்காரன்...
உன்னில் பைத்தியமாய் இருந்த பைத்தியக்காரன்
உனக்காக வருந்திய பைத்தியக்காரன்
பல தடவை ஏமாற்றம் என்று தெரிந்தும்
நான் உன் மீது கொண்ட பாசத்தவிப்பில்
உன்னை சுமந்து கொண்டேனே
இவன் பைத்தியக்காரன்தான்.
ஆனால் நீ.. ஏமாற்றும் ஒவ்வொரு
நாளும் கூடிக்கொண்டு செல்வதால்
இனியும் வேண்டாம்.நீ.. தரும் ஏமாற்றமும்
உன் பொய் கொண்ட அன்பும்
இனியும் ஒரு பொய்யுக்குள் வாழ்வதை விட
இந்த பொய் கொண்ட காவியக்காதலுக்கு
இன்றே விடை கொடுத்து மௌனக் கடலில்
மூழ்கிப் போகின்றேன் நான்
இதுவே.. நான் எழுதும் என்இறுதிக் கவிதை உனக்கு
உனக்காக இக்கவி பேனாவில் உள்ள மை எழுதவில்லை
என் கண்களில் இருந்து அருவியாய் கொட்டுகின்ற
கண்ணீர் எழுதுகின்றது...
இதை படிக்காவிட்டாலும் பத்திரப் படுத்திவை
என் மரணத்தின் பின் என்னை உணரவைக்கும் உனக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
Very Nice Kavithai...
ReplyDeleteAntha thurogiyai kadavul nichayamaaga mannikka maataar
She will feel that pain of true love one day
Really very sorry for you Nataraj