மழைச்சாரலில் வரும் வானவில்போல் புன்னகைத்தாய்
உன் புன்னகை மழையில் நனைந்தது என் இதயம்...
பௌர்ணமி நிலவுபோல் பார்வை வீசினாய்
உன் பார்வை ஒளியில் மின்னியது என் இதயம்...
அருவியின் ஓசைபோல் வார்த்தைகள் உதிர்த்தாய்
உன் வார்த்தையில் வசியமானது என் இதயம்...
கொடை வள்ளல் போல் அன்பை தந்தாய்
உன் அன்பே தானமாய் பெற்றது என் இதயம்...
பூத்துக்குலுங்கும் நந்தவனம் போல் மகிழ்ச்சி தந்தாய்
உன் மகிழ்ச்சி ஒன்றையே சுவசமாக்கியது என் இதயம்...
கோடைகால இலைபோல் திடீரென உதிர்ந்தாய்
உயிர்போன வலியில் துடிக்கிரதடி என் இதயம்...
என் உயிரை எடுத்துக்கொண்டு என்னை விட்டு போனவளே
என் இதயத்தை கிழித்துவிட்டு நிம்மதியாய் சென்றுவிட்டாய்...
உன்னையே உலகம் என நம்பும் நான் உனக்காக சாவதா?
என்னையே உலகம் என நம்பும் என் குடும்பத்துக்காக வாழ்வதா?
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment