கனவுக்குள் கலந்தபோதும்
உன் திரு முகம் மறையவில்லை……!
உன்னிடம் பொய் சொல்ல
என் உதடுகள் கூட வெறுக்கின்றன
உண்மையில்லா உன் வார்த்தைகளைக் கேட்டு………….!
உண்மையில்லா உன் வார்த்தைகளால்
என் மனதை குத்துகிறாயே
நான் செய்த பாவம் தான் என்ன………?
உன்னை நேசித்தது பாவமா? இல்லை
உன்னை நம்பியது பாவமா…….?
பொய்யாய் கூட உன்னிடம் நான் பொய் சொன்னதில்லை
என்னிடம் பொய் சொல்ல உன் உதடுகள் கூசவில்லையா………..?
மெளனமாய்க் கூட நான் உன்னை விட்டதில்லை-
இன்று உன் வார்த்தைகளால்
நானே மெளனம் அடைகிறேன்………!
பொய் வார்த்தை என்னும் வில்லால்
என்னை தாக்குகிறாய்…………..!
உடைந்து வீழாமல் என் நெஞ்சம்
பூரித்தா போகுமடி……..?
என் நெஞ்சோரம் சோகத்தை
தந்ததாய் ஓர் நினைவு……!
உன் பொய் வார்த்தையால்
உயிர் போனதாய் ஓர் உணர்வு……..!
அழைக்காமல் வந்து
சோகத்தை தந்தாயே……!
அழுகின்ற விழிகளுக்குள்
அழியாமல் உன் நினைவு மட்டும்……………..!
விழியோரம் துளி நீரும் கரைகின்றது
நீ சொன்ன வார்த்தையை நினைக்கின்றது……….!
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment