காதலுக்கு கண்களே இல்லை!
ஆயினும் எத்தனை கண்களை
கரைய வைத்து கண்ணீர் கடிதம் படித்துள்ளது
என்னையும் சேர்த்து!
விண்ணீர்த்துளி மண்ணில்
வீழ்ந்து கரையும் போது "மண்வாசனை"!
என் கண்ணீர்த்துளி மண்ணில்
வீழ்ந்து கரையும் போது "உன் வாசனை"
"ஆசை பிறந்தால் அமுதும் விஷமாகும்!
ஆசை துறந்தால் விஷமும் அமுதாகும்!"
எவனோ கூறியது!
எனக்கு பிறந்த ஆசையெல்லாம் துறந்தேன்!
உன் மீது ஆசை வந்ததும்!
ஒரு வார்த்தை சொல். விஷமே அமுதாக உண்பேனடி!
இத்தனை வரிகளும் உனக்கெப்படி புரியும்!
நீ எனக்கு அறிமுகப்படுத்திய
காதலை, உனக்கு அறிமுகப்படுத்துவதற்காக
இதயத்தை அடகு வைத்து வாங்கிய ரோஜாவுடன்
வந்தேன்!,
அதற்குள்,...... நீயே அறிமுகப்படுத்திவிட்டாயே!
.....,...............! உன் காதலனை!
உன்னால் அழும் என் கவிகளுக்காகவது
அனுமதி கொடு! கண்ணீராய் வரட்டும்!
உன் கண்களில் இருந்து
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment