அதோ பார் எல்லோரும் நடந்து செல்கிறார்கள்,
நான் மட்டுமே நீயின்றி இறந்து செல்கிறேன்!
உலகம் கைகாட்டிய ஆயிரம் காரணங்களுக்கிடையே நீ
பிரிந்து விட்டாய் -
உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால்
நினைத்து நினைத்துருகி -
நாணற்றுப் போகிறேன் நான்!
உனக்கொன்று தெரியுமா..
உனக்காக நான் சிந்தியக் கண்ணீரெடுத்து
உலகத்தையே நனைத்துவிடலாம்;
உனக்காகக கனக்கும் இதயத்தில்
மலைகனமும் தாங்கிக் கொள்ளலாம்!
உனை உச்சரிக்காத பொழுதுகளை
மரணத்தை நோக்கிய பயணமெனலாம்;
நீயில்லாத வாழ்க்கையை – நான்
இறந்தும் - வாழ விதித்த விதி எனலாம்!
உன்னை காணாத பொழுதை
குருட்டு நகர்வெனலாம்
உனை பிரிந்த தவிப்பை சொல்ல
வார்த்தையின்றி - மௌன சோகம் கொள்ளலாம்!
உன்னிடம் பேசாத ஒரு வார்த்தையை
எனக்குக் கிடைக்காத நிம்மதி எனலாம்
உன்னிடம் பேசி பேசி தீர்த்ததில்
இன்னும் ஏழு ஜென்மம் இருப்பினும் -
உனை நினைத்தே கடந்துப் போகலாம்!
உனை சந்திக்காத நாட்களை
நான் வாங்காத சிரிப்பெனலாம்
நீயின்றி வாழும் நிலையை
என் பாவத்தின் சம்பளமென்று கொள்ளலாம்!
நீ அழைக்காத என் பெயரை
யாரும் அழைக்காத தனிமையிலிருந்து மாய்த்துவிடலாம்
உன் குரல் கேட்டு விழிக்காத பொழுதை
நான் வாழாத நாட்களென்று -
நாளேட்டில் குறித்துக் கொள்ளலாம்!
நீயின்றி நீயின்றி அழும்
அழுகைக்கெல்லாம் எவர் வந்து
என்னை சமாதானம் செய்வார் -
நான் அழுது அழுது ஒழிந்த பின்
வேண்டுமெனில் - உன் நினைவால் பயித்தியமானேனென்பார்!
உன் இதய குருதி கொண்டு
என் நினைவை அழித்துக் கொள் தங்கமே!
நீயில்லாத வாழ்வை -
நானும் வாழப் போவதில்லை
இறந்தேன் என்றே எண்ணிக்கொள் என் செல்லமே!!
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment