உன் காதல் எனும் பொய்யான வார்த்தையால்
என் மனதில் இடம் பிடித்தாய்...
ஆனால் உன் இதயத்தில் இன்னும்
அந்த பொய்யே உள்ளது..
காதலை பொய்யென நினைத்தவள் நீ..
என் மனதின் உணர்ச்சிகள்
உனக்கு விளையாட்டு பொருளா??
என் சுவாசத்தின் வலிகள்,
நீ பிடித்து விளையாடும் வண்ணத்து பூச்சியா??
நானும் நீயும் ரோஜா பூவும்,
ரோஜா செடியின் முள்ளும் போன்றவர்கள்..
நான் ஏன் உனை சந்தித்தேன் என்பது
எனது நீங்காத ஏக்கம்….
இன்றும் நான் உன்னை மறக்க நினைக்கிறேன்..
அதை நினைக்கையில் நினைவுகளின் சாரல்
எனை வருடிச்செல்கின்றன…..
அதன் வலியை கூட என்னால் மறக்க இயலும்..
ஆனாலும் உன் பொய்யான வார்த்தை
இன்றுவரையான என் வாழ்க்கையை
நெருஞ்சி முள்ளின் மேல் பயணம் செய்ய வைத்தது...
ஆனாலும் எனக்கு நம்பிக்கையில்லை....
என்னில் உள்ள உன்னை மறப்பேன் என்று....
பொய்யாக என்னுள் கலந்த காதல்
உண்மையாக என் மனதை விட்டு செல்லும் நாளை
எண்ணி வாழ்கிறேன்…..
உன்னால் நொறுங்கிய இதயம் மீண்டும் சேருகையில்
அங்கு நீ இருக்கமாட்டாயா என்று ஏக்கம்
உண்மையான அன்பை எனக்கு தருவாய்
என்ற நம்பிக்கை...
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
Mr.Nataraj,
ReplyDeleteVery sad ya.... God is great dear....
One day she will understand
But you shoul not wait her anymore