கனவுகளை கவிதையாக்க தெரிந்த எனக்கு
நினைவுகளை நிலைபடுத்த தெரியவில்லை!
காண்பவை அனைத்தும் நிஜமென்றிருந்தேன்
நெஞ்சு சுடும் வரை...விழி கலங்கும் வரை...
நிழல் என்பது புரியவில்லை!
இது அறியாமையா??? இல்லை அறியா உண்மையா???
விடை தெரியவில்லை...வினவும் முறை புரியவில்லை
வீழ்ந்தேனா...???வீழ்த்தப்பட்டேனா???
உன் விழி இரண்டும் பல்லாயிரம்
பார்வை கணைகளை தொடுத்து
காயங்களை மட்டும் விட்டுச்சென்றன...
பழியேதும் போடவில்லை...
வலி தாங்காமல் புலம்புகிறேன்.
பார்வையின் பொருள் புரியாமல்
பாவி மனம் பனியாய் உருகியது
மீண்டும் உறைய வைக்க
மனது உருகி ஓடிய பாதை தேடித் திரிகிறேன்.
நட்பென்று கை குலுக்கிக்கொள்ள...
கண்ணீரை மறைத்து கள்ளமாய் சிரிக்க
காலம் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை.
உறவு முக்கியம் இல்லை
நான் கொண்ட உணர்வே என் உயிர்...
போதும் இந்த நினைவுகள் மட்டும்.
வாழ்க்கை முழுவதும் நீ கூட வரவில்லை என்றாலும்
நான் வாழும் வரை என்னுள் வாழும்,
உன்னோடு கை கோர்த்து...இதழ் பூத்து...
மண்ணில் மிதந்த அந்த நாட்கள்!!!
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
Paavam nanbaa nee...
ReplyDeleteAval enravathu oru nall anubavippal....
Appothu unarvaal unn unmayaana kadhalai