இன்றும் என் காதோரம்
ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
இறுதியாக என்னுடன் –
நீ பேசிய அந்த கனத்த மவுனம்
பேச வார்த்தைகள் இருந்தும்
பேசமுடியாமல் பிரிந்து சென்றாயே!
என் நினைவில் மறக்க முடியாமல்
பதிந்து விட்டாய்
உன்னில் தொலைந்த நம் நினைவுகள்
இன்றும் என்னுள் கரைபுரண்டோடுகிறது
என்னுயிரில் இருந்துகொண்டே
உன்னை மாற்றினாய் என்னை ஏமாற்றினாய்
நம் நினைவுகள் அனைத்தையும்
கவிதைகளாக வரைகிறேன்
கண்ணீரில் மிதக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தேடும் என் மனதோடு
உன் நினைவில் உயிர் தவிக்கிறேன்
என் தவிப்புகள் உனக்குபுரியாமல் போனது
என் துயரமே…!!!
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment