உன்னை என் உயிர் காற்றாக
சுவாசித்தேன் -நீயோ
என் கையில் அடங்க மறுத்த
வெறும் காற்றைப் போல்
என்னை கடந்து சென்றாய்
உனக்குள் ஒளிந்திருந்து நிறம்மாறிய
உன் மனதை நினைத்து
இன்றும் வியக்குகிறேன்
நம் வசந்த காலத்தை முற்றிலும்
இலையுதிர்க்காலமாய் செய்துவிட்டாய்
உன்னில் பத்திரப்படுத்திய
என் நினைவுகளை வெறும் நினைவுச்
சின்னங்களாக மாற்றிவிட்டாய்
என் நிஜங்கள்.. என் கனவுகள்
அனைத்தையும் வெறும் நிழலாக
மாற்றிச்சென்றுவிட்டாய்
நம் நினைவாக நீ எனக்களித்த
தனிமை பரிசுடன் நீ என்னை விட்டு சென்ற
அதே இடத்தில் நான் இன்றும்
நின்றுகொண்டிருக்கிறேன்
என் உயிரினும் மேலாக உன்னை
நினைத்ததை தவிர வேறு என்ன
தவறு நான் செய்தேன்..?
என் உயிரைக் கூட
பிரிந்தாலும் பிரிவேன்
என்றும் உனை நீங்க மட்டும்
மறுப்பேன்- மறப்பேன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment