இன்றும் என் நினைவாய்
என்னிடம் நீயேதான் நிறைந்திருக்கிறாய்!
உன்னை மட்டும்தானே நேசித்தேன்
உன் அன்பில்தானே என் சுயத்தை இழந்தேன்
இருந்தும் என்னை தவிக்க விட்டு
உன்னை மட்டும் பிரித்து சென்று விட்டாயே!
மறக்க முடியவில்லை
உன்னை மறக்கவும் முயல்வதில்லை
பிரிவின் கொடுமையை
நீ பிரிந்தபோது புரிந்துகொண்டேன்
மரண நிமிடங்களின் வலியை
என் தனிமையில் உணர்ந்து கொண்டேன்
உன்னை நினைக்கும்
என் ஒவ்வொரு நொடியிலும்
நான் இருந்தும் இறந்து கொண்டு இருக்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment