நிஜமென்று வாழ்ந்த நம் உறவு
இன்று வெறும் கனவாகிக்
கலைந்த போதும்
உன் நினைவுகளை என் மனதில்
நிறைத்தே வைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை என் மனதினில்
விதைத்து விட்டு மறந்து விடு என்றாய்
நான் எப்படி மறப்பேன் ?
என் திசை எங்கும் தெரிவதெல்லாம்
உந்தன் முகம்தான்
வந்துவிடு என்று சொல்லிவிட்டு
உன் மனக் கதவை பூட்டிக் கொண்டாய்
நாம் மகிழ்ந்து பேசிய நம் நிமிடங்களை
பறித்து சென்றாய்
எனக்குள் கனவுகள் அனைத்தையும்
வளர்த்து விட்டு எனை ஏன் மறந்தாய்?
உன் உயிரை என்னிடம் தந்துவிட்டு
ஏன் என் பிரிவை கேட்டாய்?
நான் என்ன சொல்வேன்... என்ன செய்வேன்?
என் இதயம் வலிக்கிறதே..!!!
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
நல்ல கவிதை
ReplyDelete