உன்னை என் மனதில்
மறைத்து வைத்திருந்தேன்
நீயோ – என் மனதை
சிதைத்து வெளியேறி விட்டாய்
என் இதயத்தை மட்டுமே சுமந்த
உன் மனம் எப்படி இன்னொரு
இதயத்தை சுமக்க முன்வந்தது?
உன் மனதின் இந்த கொடூரத்தை
என்னால் தாங்க முடியவில்லையே
என் மனதின் வலியை நீ
உணரவேயில்லை
நொடிக்கொருமுறை உன் நினைவுகளால்
என் நினைவை இழந்து வருகிறேன்
என்னால் எப்படி உன்னை
மறக்க முடியும்?
இறைவா என் எதிரிக்கும்
வேண்டாம் இப்படி ஒரு வேதனை..!!!
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
No comments:
Post a Comment